தூத்துக்குடி அருகே வீட்டு பாடத்தினை வேறு நோட்டில் எழுதியதற்காக 1ம் வகுப்பு மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியை பலத்த காயத்துடன் மாணவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம், பழையகாயல் ராமச்சந்திரபுரத்தை சார்ந்தவர் மகேஷ். இவர் எலக்ட்ரிஷனாக வேலை செய்து வருகின்றார். இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர். இவருக்கு ஷிவானி என்ற 4வது வகுப்பு படிக்கும் மகளும், ஹரிசரன் என்ற 1வது வகுப்பு படிக்கும் மகனும் இருந்து வருகின்றனர்.
இருவரும் ஆத்தூர் சண்முகசுந்தரநாடார் மேனிலைப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு 1வது வகுப்பு படிக்கும் மாணவன் ஹரிசரண் அழுதுகொண்டே வீட்டிற்கு வந்துள்ளான். அப்போது அவரது தந்தை மகேஷ் அவனது உடைகளை கழற்றி பார்த்தபோது அவரது உடம்பெல்லாம் 10 இடங்களில் கம்பால் அடித்த காயம் இருந்துள்ளது.
மேலும் இதுகுறித்து தனது மகனிடம் மகேஷ் விசாரித்தபோது வீட்டு பாடத்தினை வேறு நோட்டில் எழுதிவிட்டு சென்றதற்கு 1வது வகுப்பு ஆசிரியர் கோமதி என்பவர் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
இது சம்பந்தமாக அவனது பள்ளி தலைமை ஆசிரியர் ரஞ்சித்திடம் அவரது தந்தை மகேஷ் கூறியபோது பொறுப்பற்ற பதிலை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவன் ஹரிசரன் காயங்களோடு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.