புதுக்கோட்டை : ஆலங்குடியில் சிற்ப வேலைக்கு சென்ற கூலி தொழிலாளர்கள் இருவர் மது போதையில் கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஒரு கோயிலில் சிற்ப வேலைக்காக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கைலாசநாதபுரத்தைச் சேர்ந்த ரவி (44) என்பவரும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா உட்பட்ட நாச்சியார்புரத்தை சேர்ந்த சண்முகநாதன்(26) ஆகிய இருவரும் வந்துள்ளனர்.
அப்போது, இருவரும் பணி முடிந்த பிறகு அப்பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது அருந்திவிட்டு சென்றபோது, இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாய் தகராறு கைகலப்பாக மாறியதைத் தொடர்ந்து, ஒருவரை ஒருவர் கீழே தள்ளி கற்களால் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் ரவி படுகாயம் அடைந்த நிலையில், சண்முகநாதனும் காயமடைந்துள்ளார்.
இதனை அடுத்து அருகே இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தற்பொழுது ரவி தலையில் 25 தையல் உள்ளிட்ட உடல் முழுவதும் 31 தையலுடன் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், அதே போல் சண்முகநாதன் சிறு காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆலங்குடியில் மக்கள் நடமாட்டம் உள்ள கடைவீதி பகுதியில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த சிற்பத் தொழிலாளர்கள் இருவரும் மது போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.