Categories: தமிழகம்

கோவையில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த 2 முக்கிய மேம்பாலங்கள் : திமுக அமைச்சருடன், அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் இணைந்து திறப்பு!!

கோவை : கோவையில் 2 முக்கிய மேம்பாலங்களை திமுக, அதிமுக, பாஜக முக்கிய நிர்வாகிகள் சேர்ந்து திறந்து வைத்தனர்.

கோவை இராமநாதபுரம், கவுண்டம்பாளையம் பகுதிகளில் கடந்த 2019 ம் ஆண்டு மேம்பாலங்கள் கட்டப்பட்டது.

இராமநாதபுரத்தில் 3.15 கி.மீ தூரத்திற்கு ரூ.238 கோடி மதிப்பீட்டில் இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பங்குசந்தை சாலையில் இருந்து ரெயின்போ பேருந்து நிறுத்தம் வரை 3.15 கி.மீ தூரத்திற்கு இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

இதே போல கவுண்டம்பாளையம் பகுதியில் 2019 ம் ஆண்டு 1.17 கி.மீ தூரத்திற்கு 60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பால பணிகளும் நிறைவடைத்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் இரு பாலங்களையும் திறந்து வைத்தார்.

கோவை இராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற பாலம் திறப்பு விழா நிகழ்வில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ( சிபிஎம்) கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் (பா.ஜ.க), கோவை வடக்கு எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் (அதிமுக ), கோவை சிங்காநல்லூர் எம்.எல்.ஏ ஜெயராம் (அதிமுக) ,கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் திமுக, பாஜ.க தொண்டர்கள் மாறி மாறி கோஷம் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் பாலங்களை திறந்து வைத்தார்.

இதன் பின்னர் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் கொடியசைத்து வாகனங்களை அனுப்பி வைத்தார். பின்னர் பேட்டியளித்த அவர் கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக இந்த பாலபணிகளை தமிழக அரசு விரைவு படுத்தி பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து இருப்பதாகவும், மாவட்டத்தின் வளர்ச்சிக்கு இந்த பாலங்கள் பயனுள்ள வகையில் இருக்கும் எனவும் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி பிரிதிநிதிகள் தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து பேட்டியளித்த கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், திமுக, பா.ஜ.க, அதிமுகவை சேர்ந்தவர்கள் இணைந்து இந்த பாலத்தை திறந்து வைத்திருப்பது மகிழ்ச்சி எனவும், மாவட்டத்திற்கு இன்னும் பல இடங்களில் பாலங்கள் தேவை எனவும் தெரிவித்த அவர், நெரிசல் மிகுந்த இடங்களை கண்டறிந்து பாலங்கள் அமைக்கவும் , மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்எனவும் வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.

இராமநாதபுரம் பாலம் மிகுந்த பயனுள்ள வகையில் இருப்பதாகவும் , சாதாரணமாக சுங்கம், இராமநாதபுரம் சிக்னல்களை கடக்க 20 முதல் அரை மணி நேரமாகும் நிலையில் பாலம் பயன்பயன்பாட்டிற்கு வந்து இருப்பதால் மிக எளிதாக இந்த பகுதிகளை கடக்க முடிவதாகவும் பொது மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இராமநாதபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய இரு பாலங்களும் கட்டிமுடுக்கப்பட்டு சிறு,சிறு பணிகளால் பயன்பாட்டிற்கு வராமல் இருந்த நிலையில் தற்போது அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இருப்பது கோவை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

5 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

6 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

6 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

7 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

7 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

8 hours ago

This website uses cookies.