திருவள்ளூர் ; திருத்தணியில் இருந்து தனது மகனை ஒரே நேரத்தில் கடித்த இரு பாம்புகளை அடித்துக் கொன்ற தந்தை, அதனை எடுத்துக் கொண்டு மகனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கொல்ல குப்பம் கிராமத்தில் வசிக்கும் மணி எல்லம்மாள். இவர்களது 7 வயது மகன் மணி. இவர்கள் அதே பகுதியில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
நேற்று வழக்கம்போல அவர்களுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, நள்ளிரவில் கண்ணாடி விரியான் மற்றும் கட்டுவிரியன் பாம்பு அவருடைய மகனான மணியை கடித்துவிட்டு மகன் மேலே படுத்து இருந்தது. இதனை கண்ட தகப்பனார், அந்த இரண்டு பாம்பையும் அடித்து கையில் எடுத்துக் கொண்டு, மகனையும் அழைத்துக் கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கும் சென்றுள்ளார்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கையில் 2 பாம்புகளையும் எடுத்துக் கொண்டு, தன் மகனுடன் சிகிச்சைக்கு வந்த நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மணிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, திருவள்ளூர் மாவட்டத்தில் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவது என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.