திரும்பப் பெறப்பட்ட 2 ஆயிரம் நோட்டுகளுக்கு முத்தம் கொடுத்து பிரியாவிடை அளித்த முன்னாள் ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
இந்தியா முழுவதிலும் 2ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக ஆர்பிஐ அறிவித்தது. இது தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளும் வெளியாகி பொதுமக்களிடையே பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையை சேர்ந்த முன்னாள் ரவுடியான வரிச்சியூர் செல்வம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கையில் வைத்துகொண்டு 2 ஆயிரம் ரூபாய் குறித்து பேசும் வீடியோ வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.
அந்த வீடியோவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு முகர்ந்து பார்த்து பேசியுள்ள வரிச்சியூர் செல்வம், “இனி எப்போ பார்க்க போக்க போறேனோ.. அடுத்து 2 ஆயிரம் தாள போட்டா சொல்லிட்டு போடுங்கப்பா சாமிகளே. ஆத்தா எங்களை காக்கும் தெய்வம் நீ, எங்கள விட்டு நீ போற போயிட்டு வா,” என கூறி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வருகிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.