திருப்பூர் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில், கல்லூரி மாணவர் உயிரிழந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் நவீன்குமார்( 19 ). திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் நேற்று இரவு 7 மணி அளவில் ஊத்துக்குளியில் இருந்து படியூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது இரட்டைக்கிணறு பகுதி அருகே டீ கடையில் நின்று கொண்டிருந்த ரமேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து எதிர் திசையில் இயக்கியுள்ளார்.
அப்போது, எதிரே வந்த நவீன்குமார், ரமேஷ் ஆகியோரின் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில், நவீன் குமார் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்தார்.
இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.