நிதி நிறுவனம் நடத்தி மோசடி… உதவியாளர் வீட்டின் மூன்பு 2 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
3 April 2023, 4:17 pm
Quick Share

ராணிப்பேட்டை ; நெமிலி அருகே ஐ எஃப் எஸ் நிதி நிறுவனத்தின் உதவியாளர் வீட்டின் முன்பு பணம் முதலீடு செய்த 2 பேர் தீக்குளித்து தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி யில் ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தின் உதவியாளர்களில் ஒருவரான ஜெகன் என்பவரின் வீட்டின் முன்பு முதலீட்டாளர்கள் திடீரென குவிந்தனர். ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெகநாதன் ஜாமினில் வெளி வந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு அவர் நெமிலியில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு வந்ததாக தகவல் பரவிய நிலையில், சுற்றியுள்ள கிராமப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் ஜெகநாதன் வீட்டின் முன்பு குவிந்தனர். அப்பொழுது ஆவேசமடைந்த மோகன்(35), தீரன்(33) ஆகியோர் திடீரென தங்கள் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்தனர்.

தகவல் அறிந்த நெமிலி காவல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலைக்கு முயன்ற இரண்டு வாலிபர்கள் மீது தண்ணீர் ஊற்றி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சு வார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர். ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தின் உதவியாளர் வீட்டின் முன்பு இரண்டு நபர்கள் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 211

0

0