தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பள்ளி மாணவியை மதமாற்றம் செய்ய வற்புறுத்திய 2 பேரை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என பெண்ணின் உறவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள பள்ளி விடுதியில் படித்த மாணவி லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்தார். இவரை மதமாற்றம் செய்ய சொல்லி வற்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இந்தப் புகார் தொடர்பாக மாணவியின் தந்தை முருகானந்தம் மற்றும் சித்தி சரண்யா ஆகியோரிடம் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் வைத்து திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து வெளியே வந்த மாணவியின் சித்தி சரண்யா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது;- எனது மகளை மதமாற்றம் செய்ய கடந்த 2 ஆண்டுகளாக வற்புறுத்தி வந்துள்ளனர். இதனால் அவள் மனதுக்குள் காயப்பட்டு வந்துள்ளார். மேலும் விடுதியில் கழிவறையை சுத்தம் செய்யச் சொல்லியும், பாத்திரங்கள் கழுவ சொல்லியும் தொந்தரவு செய்து வந்துள்ளனர். தொடர்ந்து மதம் மாறுமாறு வற்புறுத்தியதால் அவள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவளை மதமாற்றம் செய்ய வற்புறுத்திய 2 பேரை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம். பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கே இந்த நிலை என்றால் மற்ற மாணவிகள் நிலை என்னவாகும். எங்கள் மகளின் சாவுக்கு நியாயம் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.