பட்டா மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம்.. கிராமநிர்வாக அலுவலர் அதிரடி கைது : வாண்ட்டடாக வந்து சிக்கிய உதவியாளர்!!!
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாம்பட்டி தைலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (36) இவர் தருமபுரி அடுத்த மிட்டாநூலஅள்ளி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவரிடம் மிட்டா நூலஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசமூர்த்தி. தனது பூர்வீக நிலம் தனது தாத்தா பச்சையப்பன் அவரின் தந்தை காளியப்பன் பெயரில் இருந்துள்ளது. இது கடந்த 2021 ஆம் ஆண்டு பட்டா எண்ணில் காளியப்பன் மகன் பச்சையப்பன் மற்றும் கமலேசன் என்ற இருவர் பெயர் அதில் இடம் பெற்றுள்ளது.
இதனால் இவர்கள் தங்களுக்கு சொந்தமில்லை. இந்த பெயரை நீக்கி தருமாறு கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனிடம் கடந்த டிசம்பர் மாதம் கணேசமூர்த்தி கேட்டுள்ளார் அதற்கு கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் தனக்கு ரூபாய் 25000 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் தனக்கு அவசரம் ரூ.20 ஆயிரம் உடனடியாக கொடுக்கும் படி கேட்டு உள்ளார். இதனையடுத்து கணேசமூர்த்தி தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவித்தார்.
இந்த புகாரையடுத்து இன்று லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கணேசமூர்த்தி கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனிடம் பணம் கொடுக்க வந்த போது உதவியாளரிடம் பணத்தை கொடுக்கும் படி கூறியதால் கணேசமூர்த்தி தனியார் உதவியாளர் அமுதாவிடம் ரூபாய் 20 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுக்கும் பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அமுதா மற்றும் கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுவமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து ரூபாய் 20 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் தருமபுரியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.