விருதுநகர் : விருதுநகர் அருகே பட்டாசு கடையில் 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகே கவலூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுரை சரக டிஐஜி அலுவகத்திற்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. இதையடுத்து மதுரை சரக டிஐஜி பொன்னி உத்தரவின் பெயரில், பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில் சிவகாசி செல்லும் சாலையில் கவலூர் என்ற இடத்தில் உள்ள ஜோதி பட்டாசு கடையில் ஆய்வு நடத்தினர்.
அப்போது அந்த கடையில் 200 கிலோ மதிப்புடைய கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கடையில் இருந்த மதுரையை சேர்த்த சிவசாமி மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தலைமறைவாக உள்ள சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விருதுநகரில் 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.