விருதுநகர் : விருதுநகர் அருகே பட்டாசு கடையில் 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகே கவலூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுரை சரக டிஐஜி அலுவகத்திற்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. இதையடுத்து மதுரை சரக டிஐஜி பொன்னி உத்தரவின் பெயரில், பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில் சிவகாசி செல்லும் சாலையில் கவலூர் என்ற இடத்தில் உள்ள ஜோதி பட்டாசு கடையில் ஆய்வு நடத்தினர்.
அப்போது அந்த கடையில் 200 கிலோ மதிப்புடைய கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கடையில் இருந்த மதுரையை சேர்த்த சிவசாமி மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தலைமறைவாக உள்ள சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விருதுநகரில் 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.