200 ml ஆவின் பால் விலை திடீர் உயர்வு. 200 mlக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டு, வழக்கமாக ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் வரும் 200 ML ஆவின்பால் இன்று முதல் வயலட் நிற பாக்கெட்டுகளில் விற்பனைக்காக வந்துள்ளது.
தமிழக மக்களுக்குப் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக, தினமும் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்பால் கொழுப்புச் சத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீல நிற பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:- ஆவின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வரும் COW Milk ஆரஞ்சு நிற பாக்கெட்டுகள் 15 -11-2023 முதல் நிறுத்தம் செய்யப்பட்டு 16 ஆம் தேதி முதல் ஆவின் டிலைட் என்னும் பெயரில் வைலட் நிற பாக்கெட்டுகள் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டது. 200 மில்லி பாக்கெட் விற்பனை விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் காலை முதல் ஆவின் டிலைட் 200 ml பாக்கெட் பால் விற்பனைக்கு வந்துள்ளது. 200ml ஆரஞ்சு நிற பாக்கெட்டாக இருந்தபோது ₹9.50 விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் புதிய பாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டு ரூபாய் 10 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென 200ml பால் பாக்கெட்டுக்கு 50 பைசா உயர்த்தியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.