Categories: தமிழகம்

கோவையில் மெகா சூதாட்டம்…லட்சக்கணக்கில் புழங்கிய பணம்: 21 பேர் கைது…ரூ.1 லட்சம் ரொக்கம் பறிமுதல்..!!

கோவை: கோவையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை சூலூர் போலீசாருக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் மெகா சூதாட்டம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர், விசாரணையில் அவர்கள் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட மயிலேரிபாளையம் பகுதியை சேர்ந்த கதிர் (வயது 23), திருப்பூர் சேர்ந்த சரவணன் (32), செல்வபுரம் பகுதியை சேர்ந்த ராமு (47), கோவை காந்திபுரத்தை சேர்ந்த சுரேஷ்பாபு (48) உள்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து சீட்டுக் கட்டுகள் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் ரூ. 1 லட்சத்து 8 ஆயிரத்து 200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோன்று நெகமம் போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இட்டேரி காளியப்பன் பாளையம் பகுதியில் சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ. 3,710யை பறிமுதல் செய்தனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.