மதுரை ; மதுரையில் 21 வயது இளைஞரை வீடுபுகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
நேற்று இரவு மதுரையில் உள்ள கரிசல் குளத்தில் 21 வயது மதிக்கத்தக்க பூமிநாதன் என்கிற கோழி என்ற இளைஞரை வீடு புகுந்து மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்தது. மதுரையை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட, கரிசல் குளத்தை சேர்ந்த ஜீவா (21), மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜீவமணி (@) தீப்பெட்டி (25), மணி ராஜா (22), நவீன்பிரசாந்த் (24) 4 பேரை கைது செய்து கூடல்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த பூமிநாதன் மற்றும் அவரது நண்பரான முருகானந்தத்துடனும் கரிசல் குளத்தைச் சேர்ந்த ஜீவா என்பவருடன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பூமிநாதன் மற்றும் முருகானந்தம் இருவரும் சேர்ந்து ஜீவாவை அடித்து விட்டதாகவும், அதனால் முன்விரோதத்தில் ஜீவா மற்றும் அவரது கூட்டாளிகள் நேற்று மாலை முதல் பூமிநாதன் வீட்டின் அருகே காத்திருந்து பூமிநாதனை வெட்டி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
கடைசித் திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முழு நேர அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தனது கடைசித்…
இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வர்கள் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக நிரப்பப்படாத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து நிரப்ப…
காஞ்சிபுரம் அடுத்துள்ள சின்னயங்குளம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும்…
உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
This website uses cookies.