மதுரை ; மதுரையில் 21 வயது இளைஞரை வீடுபுகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
நேற்று இரவு மதுரையில் உள்ள கரிசல் குளத்தில் 21 வயது மதிக்கத்தக்க பூமிநாதன் என்கிற கோழி என்ற இளைஞரை வீடு புகுந்து மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்தது. மதுரையை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட, கரிசல் குளத்தை சேர்ந்த ஜீவா (21), மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜீவமணி (@) தீப்பெட்டி (25), மணி ராஜா (22), நவீன்பிரசாந்த் (24) 4 பேரை கைது செய்து கூடல்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த பூமிநாதன் மற்றும் அவரது நண்பரான முருகானந்தத்துடனும் கரிசல் குளத்தைச் சேர்ந்த ஜீவா என்பவருடன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பூமிநாதன் மற்றும் முருகானந்தம் இருவரும் சேர்ந்து ஜீவாவை அடித்து விட்டதாகவும், அதனால் முன்விரோதத்தில் ஜீவா மற்றும் அவரது கூட்டாளிகள் நேற்று மாலை முதல் பூமிநாதன் வீட்டின் அருகே காத்திருந்து பூமிநாதனை வெட்டி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.