திருவள்ளூர் பொன்னேரி அருகே அடகு கடை உரிமையாளர் உடல்நிலை சரியில்லாததால் ஊழியரை அடகு கடையை பார்த்துக்கொள்ளக் கூறிய நிலையில், பொதுமக்களின் 225 சவரன் தங்க நகைகளுடன் தலைமறைவான சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருஆயர்பாடியில் வசித்து வருபவர் ராஜஸ்தான் மாநிலம் சாண்டியா பகுதியைச் சேர்ந்த கன்னியாலால். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வேண்பாக்கம் பகுதியில் அடகு கடை நடத்தி வந்த நிலையில், கடையைப் பார்த்துக் கொள்ள ராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்த உறவினரான சுரேஷ் வியாஸ் என்பவரை அழைத்து வந்து அடகு கடை நடத்தி வந்துள்ளார்.
கடந்த மூன்று வருடமாக உடல்நிலை சரியில்லாமல் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட கன்னியாலால். அடகு கடைக்கு வராமல் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில், நிலையில் பொதுமக்களிடமிருந்து அடகு பெறப்பட்ட நகைகள் சுமார் 225 சவரன் தங்க நகைகள் அனைத்தும் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சடைந்த அவர், இது குறித்து பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து தலைமறைவாகி தப்பி ஓடிய ஊழியர் சுரேஷ் வியாசை பொன்னேரி காவல் துறையினர் ராஜஸ்தானுக்கு சென்று கைது செய்து அழைத்து வந்தனர்.
பின்னர், விசாரணைக்குப் பிறகு, பின்னர் பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
பாதிக்கப்பட்ட அடகு கடைக்கடை உரிமையாளர் காவல் துறையினர் அவரிடமிருந்து தனது நகையை மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தங்களுடைய வாடிக்கையாளர்கள் அடகு நகையை திரும்ப தருமாறு கேட்டு வருவதாகவும், அடகு நகையை மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார் ..
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.