கடலூர் : சிதம்பரம் அருகே அழுகிய முட்டை சாப்பிட்டதால் பள்ளி மாணவ மாணவிகள் 25 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அத்தியாநல்லூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள், 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மதிய உணவு சாப்பிட்ட 25 பள்ளி மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம், தலைவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவர்களை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இதையடுத்து மாணவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் பள்ளி மாணவர்கள் மயக்கம் அடைந்தது குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர்கள் மதிய உணவு சாப்பிடும் பொழுது அவர்களுக்கு அளித்த முட்டை காலாவதியாகி அழுகிப் போய் உள்ளதாக தெரியவந்துள்ளது.இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் சென்று தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மத்தியில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.