தமிழகம்

60 வயது நபருடன் 6 பீர் குடித்த 27 வயது இளம்பெண் லாட்ஜில் மர்ம மரணம்!

சென்னை வேளச்சேரியில் 60 வயது முதியவருடன் தங்கியிருந்த 27 வயது பெண் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: சென்னை, வேளச்சேரி – தரமணி 100 அடி சாலையில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இங்கு 60 வயது முதியவர் ஒருவர், 27 வயது இளம்பெண் உடன் அறை எடுத்து தங்கி உள்ளார். இந்த நிலையில், இந்த இளம்பெண் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து விட்டதாக வேளச்சேரி போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இது தொடர்பாக முதியவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த விசாரணையில், சென்னை சிந்தாதிரிபேட்டையைச் சேர்ந்த ஜோதி (60). இவருக்கு வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சசிகலா (50) என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சசிகலா உடல்நலக்குறைவால் இறந்துவிட, கணவனைப் பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து தங்கி இருந்த அவரது 2வது மகள் ரம்யா (27) உடன் ஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தான், கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் ரம்யாவும், ஜோதியும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். முன்னதாகவே, ரம்யாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், விடுதிக்கு வரும்போதே 6 பீர் பாட்டில்கள் வாங்கி வந்துள்ளனர். இதில், அன்று இரவு ரம்யா 4 பீர் குடித்துள்ளார்.

பின்னர் இருவரும் தூங்கி இருக்கிறார்கள். அப்போது, நள்ளிரவில் எழுந்த ரம்யா, தனக்கு நெஞ்சு வலிப்பதாக ஜோதியிடம் கூறி உள்ளார். அதற்கு டாக்டரிடம் செல்வோமா என முதியவர் கேட்க, வேண்டாம் என ரம்யா கூறினாராம். இதனையடுத்து, காலையில் மீண்டும் 2 பாட்டில் பீர் குடித்தநிலையில், ரம்யா குளித்துவிட்டு வந்துள்ளார்.

இதையும் படிங்க: டீ, பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது குழந்தை உயிரிழப்பு.. இறந்தும் அலைக்கழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

அப்போது, ரம்யாக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே ரம்யா இறந்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர். பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வேளச்சேரி போலீசார், வழக்குப்பதிவு செய்து ரம்யா உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என தெரியவரும் என வேளச்சேரி போலீசார் தெரிவித்தனர். அதேநேரம், அவர் அருந்திய பீர் பாட்டிலை சோதனைக்கு அனுப்பி உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

6 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

6 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

6 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

7 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

8 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

8 hours ago

This website uses cookies.