Categories: தமிழகம்

இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை மூட்டைகள் பறிமுதல்.. தட்டித் தூக்கிய கியூ பிரிவு அதிகாரிகள்..!

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 270 கிலோ பீடி இலை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கடத்தலுக்கு பயன்படுத்திய லோடு வேன், இருசக்கர வாகனம் கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பூச்சி மருந்துகள், பீடி இலை, கஞ்சா உள்ளிட்டவை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் கடலோர காவல் படையினர், கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் உளவுப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து பீடிகளை கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, கீழ் பிரிவு காவல் ஆய்வாளர் விஜய் அனிதா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து வடக்கு புரத்தில் நேற்று இரவு லோடு வேனில் இருந்து படகுக்கு சரக்குகளை ஏற்றி கொண்டிருந்த TN 69 BS 5427 என்ற பதிவு எண் கொண்ட மாருதி சுசுகி சூப்பர் கேரி லோடு வாகனத்தை கியூ பிரிவு போலீசார் சுற்றிவளைத்தனர்.

அப்போது, போலீசாரை கண்டதும் அங்கு பைபர் படகில் பீடி இலை மூட்டைகளுடன் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கடலுக்குள் தப்பியோடியுள்ளனர். தொடர்ந்து லோடு வேனை சோதனையிட்டபோது, அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்துவரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 9 பீடி இலை மூட்டைகள் 270 கிலோ பீடி இலைகள் இருப்பதை கண்ட கியூ போலீசார் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய TN 69 BC 3348 என்ற பதிவு எண் கொண்ட பல்சர் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், கடத்தலில் ஈடுபட்ட திரேஸ்புரம் பிச்சையா என்பவரது மகன் ஆரோக்கிய ஜான்சன் (36) என்ற நபரை கைது செய்து மேலும் அவருக்கு சொந்தமான பைப்பர் படகில் கடலுக்குள் தப்பியோடிய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பிடிபட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.