Categories: தமிழகம்

இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை மூட்டைகள் பறிமுதல்.. தட்டித் தூக்கிய கியூ பிரிவு அதிகாரிகள்..!

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 270 கிலோ பீடி இலை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கடத்தலுக்கு பயன்படுத்திய லோடு வேன், இருசக்கர வாகனம் கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பூச்சி மருந்துகள், பீடி இலை, கஞ்சா உள்ளிட்டவை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் கடலோர காவல் படையினர், கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் உளவுப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து பீடிகளை கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, கீழ் பிரிவு காவல் ஆய்வாளர் விஜய் அனிதா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து வடக்கு புரத்தில் நேற்று இரவு லோடு வேனில் இருந்து படகுக்கு சரக்குகளை ஏற்றி கொண்டிருந்த TN 69 BS 5427 என்ற பதிவு எண் கொண்ட மாருதி சுசுகி சூப்பர் கேரி லோடு வாகனத்தை கியூ பிரிவு போலீசார் சுற்றிவளைத்தனர்.

அப்போது, போலீசாரை கண்டதும் அங்கு பைபர் படகில் பீடி இலை மூட்டைகளுடன் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கடலுக்குள் தப்பியோடியுள்ளனர். தொடர்ந்து லோடு வேனை சோதனையிட்டபோது, அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்துவரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 9 பீடி இலை மூட்டைகள் 270 கிலோ பீடி இலைகள் இருப்பதை கண்ட கியூ போலீசார் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய TN 69 BC 3348 என்ற பதிவு எண் கொண்ட பல்சர் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், கடத்தலில் ஈடுபட்ட திரேஸ்புரம் பிச்சையா என்பவரது மகன் ஆரோக்கிய ஜான்சன் (36) என்ற நபரை கைது செய்து மேலும் அவருக்கு சொந்தமான பைப்பர் படகில் கடலுக்குள் தப்பியோடிய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பிடிபட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

Poorni

Recent Posts

குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை : தூய்மை பணியாளர்கள் ஆதங்கத்துடன் போராட்டம்!

குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…

8 minutes ago

அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?

நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

29 minutes ago

இனி குட் பேட் அக்லிக்கு மூடு விழாதான்! மூணே வாரத்துல இப்படி சோலியை முடிச்சிட்டாங்களே?

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

35 minutes ago

படையப்பா ரஜினிக்கு பதில் செந்தில் பாலாஜி… கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…

54 minutes ago

மறுபடியும் என் படத்துல நயன்தாராவ போடாதீங்க… சூப்பர் ஸ்டாரின் திடீர் கட்டளை : என்ன ஆச்சு?

நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…

1 hour ago

பிரபல நடிகையுடன் கடற்கரையில் உல்லாசம்? கையும் களவுமாக மாட்டிய கௌதம் மேனன்!

வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…

2 hours ago

This website uses cookies.