போடிநாயக்கனூர் அருகே 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 28 வயது இளம்பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் நல அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போடி மகளிர் காவல் துறையினர் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ளது சில்லமரத்துபட்டி கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள் இல்ல காப்பகம் அமைந்துள்ளது. இங்கு தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரி (28) குழந்தைகள் பராமரிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.
ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழும் இவர்வேலை பார்த்து வரும் காப்பக விடுதியில் தங்கி பயின்று வரும் ஆண்டிபட்டியைச் சேர்ந்த 10 வயது பள்ளி சிறுவன் இந்த காப்பகத்தில் தங்கி இருந்து அருகில் உள்ள சில்லமரத்துபட்டியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த சிறுவனுக்கு முனீஸ்வரி இரவில் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் இந்த சிறுவன் அந்த காப்பகத்தில் இருந்து போடிநாயக்கனூர் சில்லமரத்துப்பட்டி அருகே உள்ள மற்றொரு தனியார் தொண்டு நிறுவன காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு பள்ளி சிறுவன் மனரீதியாக பாதிப்புகளுடன் உடல் சோர்வாக காணப்பட்டு வந்த நிலையில் அங்குள்ள காப்பக விடுதி பராமரிப்பாளர்கள் அவனது சோர்வு குறித்து காரணம் விசாரித்த பொழுது தான் முதலில் தங்கி இருந்த விடுதியில் முனீஸ்வரி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது கூறியதாக தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து விடுதி நிர்வாகத்தினர் தேனி குழந்தைகள் நல அலுவலர் விஜயலட்சுமியிடம் தகவல் தெரியப்படுத்தவே உடனடியாக அவர் சிறுவனை விசாரித்து போடி மகளிர் காவல் நிலையத்தில் முனீஸ்வரி மீது புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
புகார் அளித்ததை தொடர்ந்து போடி அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படும் முனீஸ்வரியை கைது செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.