சோதனையில் சிக்கிய ₹3.54 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் : விசாரணையில் பகீர்.. கோவையில் பரபரப்பு!
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெர்க்ஸ் பள்ளி அருகே பறக்கும் படை அதிகாரி மணிமேகலை தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஏம்.வி எக்ஸ்பிரஸ் என்ற தனியார் சொந்தமான ஆம்னி காரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ஒரு பெட்டியில் தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்தது தெரியவந்ததை தொடர்ந்து அதற்கான ஆவணங்கள் குறித்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர்.
ஆனால், அதில் உரிய ஆவணங்கள் இல்லாததால் தங்க நகைகளை பறிமுதல் செய்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் சுமார் ஐந்தரை கிலோ இருக்கும் எனவும் சுமார் 3.54 கோடி ரூபாய் மதிப்பு எனவும் இந்த தங்கம் மற்றும் வைர நகைகள் விமானம் மூலம் மும்பைக்கு எடுத்துச் செல்ல கொண்டு வந்துள்ளதாக விசாரணையில் ஓட்டுநர் கூறியதாக பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது எனவும் உரிய ஆவணங்களை காண்பித்து நகைகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.