Categories: தமிழகம்

டூவீலரில் சென்ற பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம்: KTM பைக்கில் வந்த கொள்ளையர்கள் 3 பேர் கைது..!!

கோவை: மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் பட்டப்பகலில் 14 1/2 சவரன் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி காட்சியால் 3 கொள்ளையர்கள் சிக்கினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இரத்த வங்கி மருத்துவராக பணிபுரிந்து வருபவர் ராம் தீபிகா. இவர் கடந்த ஏப்ரல் 24ம் தேதி மருத்துவமனையில் பணி முடித்து விட்டு மதியம் காரமடை காந்தி நகர் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது,அவரை பின்தொடர்ந்து விலையுயர்ந்த பைக்கில் வந்த மூவர் ராம்தீபிகா அணிந்திருந்த மொத்தம் 14 1/2 சவரன் மதிப்புள்ள தாலிச்செயின் உள்ளிட்ட நகைகளை பறித்துச்சென்றுள்ளனர்.இதுகுறித்து மருத்துவர் ராம் தீபிகா காரமடை காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காரமடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர்.அப்போது,மூன்று இளைஞர்கள் விலையுயர்ந்த கேடிஎம் பைக்கில் வந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் காரமடை காவல் துறையினர் இவ்வழக்கு சம்பந்தமாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ரஞ்சித் குமார்(22),அஜீத் குமார்(20) மற்றும் கோவை சித்ரா பகுதியை சேர்ந்த அபிஷேக் குமார்(23) உள்ளிட்ட மூவரை வாகன சோதனையின் போது பிடித்துள்ளனர்.பின்னர்,அவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சாத்தூரை சேர்ந்த ரஞ்சித் குமார்,அஜீத் குமார் உள்ளிட்ட இருவரும் தற்போது கோவை விளாங்குறிச்சி பகுதியில் தங்கியிருந்து அவர்களது நண்பரான அபிஷேக் குமாருடன் சேர்ந்து மேட்டுப்பாளையம் மருத்துவர் ராம்தீபிகாவிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தினையும் பறிமுதல் செய்தனர். மேலும்,போலீசாரின் தீவிர விசாரணையில் பிடிபட்ட மூவர் மீதும் சரவணம்பட்டி,அன்னூர்,கருமத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.சம்பவம் நடந்து 5 நாட்களுக்குள் வழிப்பறி கொள்ளையர்கள் மூவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

UpdateNews360 Rajesh

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

23 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.