கோவை: கோவையில் ஜே.சி.பி இயந்திரத்தை திருடி கையும் களவுமாக சிக்கிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வடக்கிபாளையத்தை சேர்ந்தவர் ராமராஜ் (50). ஜே.சி.பி இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரிடம் ஜே.சி.பி இயந்திர ஓட்டுநராக வேலைபார்த்து வந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தனபள்ளி பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (24).
இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் ஜெயபிரகாஷ் பணியில் இருந்து நின்றுவிட்டார். இதனைதொடர்ந்து நேற்று அதிகாலையில் தனது நண்பர்கள் புருஷோத்தமன் (25), சக்திவேல் (26) ஆகியோருடன் ஜே.சிபி இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முத்துதோட்டம் பகுதிக்கு சென்றார்.
மேலும், மூவரும் சேர்ந்து ஜே.சி.பி இயந்திரத்தை திருடிச்செல்ல முயன்றனர். காலையிலேயே இயந்திரத்தின் சத்தம் கேட்ட ராமராஜ் வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்த போது ஜே.சி.பி இயந்திரத்தை யாரோ திருடிச் செல்ல முயல்வதை பார்த்து கூச்சலிட்டார். இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் வந்து மூவரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மூவரையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.