அதி பயங்கரமாக, பொதுமக்களின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த மூன்று இளைஞர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதி வேகமாகவும், பொதுமக்களின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் பொதுமக்களின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட கன்னியாகுமரி பூசப்பதட்டு பகுதியை சேர்ந்த ரஞ்சித், நல்லூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (எ) ஜெயராஜன், மற்றும் 17 வயது இளஞ்சிறார் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த மாதிரியான பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம், அதி பயங்கரமாக சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களை கண்காணித்து, அவர்களின் மீது வழக்குபதிவு செய்து சிறையில் அடைக்கப்படுவர் என்றும், மேலும் அவர்களின் ஓட்டுனர் உரிமை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.