பழனி கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்… விடுமுறை தினத்தில் குவிந்த பக்தர்கள்!!
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில்
மார்கழி மாதம் ஐயப்ப பக்தர்கள் ,ஞாயிறு விடுமுறை,தைப்பூச திருவிழா துவங்க உள்ளதால் பாதயாத்திரை பக்தர்கள் என இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
மின் இழுவை ரயில் ,ரோப் கார் நிலையம் , இலவச தரிசனம் ,சிறப்பு வழி கட்டண வரிசைகளில் நீண்ட வரிசையில் மூன்று மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று கோயில் நிர்வாகம் சார்பில் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக்கோவிலுக்கு செல்லவும் ,படிப்பாதை வழியாக கீழே இறங்கி செல்லவும் என ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து வருகிற ஜனவரி 19ஆம் தேதி தைப்பூசம் கொடியேற்றம் துவங்கி 28 ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் வெளியூரிலிருந்து பக்தர்கள் தரிசனத்திற்காக பாதயாத்திரையாக அலகு குத்தி காவடி எடுத்து கிரிவலப் பாதையில் ஆடி பாடி வருகின்றனர். எனவே கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.