ராணிப்பேட்டை : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை அருகே உள்ள காரை புது தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 62). இவரது மனைவி குணசுந்தரி (வயது 52). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் அறிவு மற்றும் ரமேஷ் (வயது 30) உள்ளனர்.
கடந்த 4 வருடங்களுக்கு முன் பெரிய மகன் அறிவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இளைய மகன் ரமேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்பட்டு வந்ததால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பெற்றோர்கள் நினைத்துள்ளனர்.
ரமேஷுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது தினந்தோறும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவு ரமேஷ் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்த தாய் தந்தையினர் விரக்தியில் நமக்கு இனி யார் உண்டு என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தை அறிந்த அமைச்சர் எம்.ஆர் காந்தி இறந்தவர்களின் குடும்பத்தினரின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.