Categories: தமிழகம்

கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி… பலர் மருத்துவமனையில் அனுமதி.. விசாரணையில் திக் திக் : விழுப்புரத்தில் சோகம்!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த மீனவர் குப்பமான எக்கியர் குப்பத்தில், கடற்கரையோர பகுதியான வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாரயம் விற்பனை நடந்துள்ளது.

இதனை எக்கியர்குப்பம் கிராமத்தை சேர்ந்த சங்கர்(50), தரணிவேல் (50), மண்ணாங்கட்டி(47), சந்திரன்(65), சுரேஷ்(65), மண்ணாங்கட்டி(55) உள்ளிட்ட ஆறு பேரும் கள்ளச்சாரய பாக்கெட்டுகளை வாங்கி குடித்துள்ளனர்.

ஆறு பேரும் வீட்டிற்கு சென்றவுடன் மயக்கடைந்து விழுந்துள்ளனர். உடனடியாக உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனை மற்றும் புதுவை தனியார் மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் அனுமதித்தனர்.

இதில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ், சங்கர், தரணி வேல் ஆகிய மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்கானிப்பாளார் ஸ்ரீநாதா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் எக்கியர்குப்பம் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்ட போது மது அருந்தி மயக்க நிலையில் இருந்த தெய்வமணி (35), செந்தமிழன் (35) கிருத்திகை வாசன் (56),
ரமேஷ் (52), ராஜமூர்த்தி (60) ஐந்து பேரை மீட்டு காவல்துறை வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் கிராமம் முழுவதும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி வீரானந்தம் (41), விஜயன் (63), வேல்முருகன் (51), ராமு (75), மண்ணாங்கட்டி (60) ஆகியோர் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மரக்காணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்,
தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் பொது மக்கள் கடற்கரையோரங்களில் சாராயம் அருந்திவிட்டு யாரேனும் மயக்கத்தில் உள்ளனரா என தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று ஒரு நாளில் மட்டும் சாராயம் வாங்கி குடித்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ தொடும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது மேலும் இவ்வளவு தங்கு தடை இன்றி மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் கிடைக்க பெற்றுள்ள இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, காவலர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதால் மரக்காணம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

6 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

6 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

6 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

7 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

8 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

8 hours ago

This website uses cookies.