கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நீரில் மூழ்கி இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி நகராட்சியில் உள்ள மூன்று இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த 9 நபர்கள் பள்ளப்பட்டியில் இருந்து அம்மா பட்டி கிராமத்தில் உள்ள கோரித் தோட்டம் என்ற இடத்தில் தர்காவில் தொழுகையை முடித்துவிட்டு அருகில் உள்ள பண்ணப்பட்டி குடகனாற்றில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆற்று மேம்பாலத்தின் அருகே தேங்கிய நீரில் குளிக்கச் சென்றுள்ளனர்.
மெளஃபியா (வயது 12) முதலில் குளிக்க சென்றுள்ளார் அப்பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மாட்டிக் கொண்டார். இவரை காப்பாற்றுவதற்காக சேக் பரித் (வயது 40) மற்றும் ரியாஜுதீன் (வயது 38) இருவரும் சென்று உள்ளனர்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக மூன்று பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து அரவக்குறிச்சி தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களை வெளியே கொண்டு வந்தனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.