கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே மூங்கில்விளை காலனியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மஞ்சு. இவர்களது வீட்டின் முன்பு உள்ள தெரு குழாயில் குடிநீர் பிடிப்பது சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த மகேஸ்வரி என்பவருடன் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 29-ம் தேதி சம்பவத்தன்று மகேஸ்வரி மகேஸ்வரியின் தாய் மற்றும் இரணியலை சேர்ந்த மதி மகேஸ்வரியின் கணவர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் ரமேஷ் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையால் திட்டியதுடன் கம்பியால் ரமேஷை தாக்கியுள்ளனர்.
இதில் ரமேஷ் படுகாயமடைந்து அவர்களிடம் இருந்து தப்பியோடிய நிலையில்
தடுக்க வந்த அவரது மனைவி மஞ்சுவையும் அந்த கும்பல் கட்டிலில் தள்ளி விட்டு சரமாரியாக தாக்கி தப்பி சென்றது.
இதில் படுகாயமடைந்த ரமேஷ்,அவரது மனைவி மஞ்சு ஆகியோர் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் குறித்து புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மணவாளக்குறிச்சி போலீசார் நேற்று மாலை மகேஸ்வரி மற்றும் அவரது தாய் தமிழ்செல்வி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெண்ணை கட்டிலில் தள்ளி விட்டு தாய் மகள் என குடும்பத்தோடு தாக்கும் அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.