காஞ்சிபுரம் நகரில் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க வந்த 3 பெண்கள் வீட்டு உபயோக பொருட்களை உள்ளாடைக்குள் மறைத்து திருடி செல்லும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சாலை தெரு பகுதியில் இயங்கி வரும் தனியார் சூப்பர் மார்க்கெட்டில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை சுயசேவையாக தேர்ந்தெடுத்து, அதற்கான பணத்தை கேஷ் கவுண்டரில் செலுத்தி பின்னர் பொருட்களை பெற்று செல்வர்.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமையன்று மாலை கடைக்கு வந்த மூன்று பெண்கள், பொருட்கள் வாங்குவதற்க்கான பிளாஸ்டிக் கூடையை எடுத்து கொண்டு, மளிகை பொருட்கள் பிரிவு, பூஜை பொருட்கள்,வீட்டு உபயோக பொருட்கள்,குழந்தைகளுக்கு தேவையானவை பிரிவு என அனைத்து பிரிவுகளுக்கும் சுற்றி சுற்றி வந்தனர்.
சுமார் 1மணிநேரத்திற்கும் மேலாக தங்களுக்கு தேவையான பொருட்களையெல்லாம் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் கேஷ் கவுண்டர் வரும்போது செற்ப அளவிலான பொருட்கள் மட்டுமே பில் போட்டனர். 3 பெண்மணிகளில் ஒரு பெண்மணி எவர்சில்வர் ஸ்பூன் உள்ளிட்ட பொருட்களை பர்சேஸ் செய்து 80 ரூபாய் பணம் செலுத்தினார்.மற்றொரு பெண் கூல்டிரிங்க்ஸ் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி 70 ரூபாய் செலுத்தினார்.
அந்த மூன்று பெண்களும் சேர்ந்து 150 ரூபாய் க்குதான் பொருட்களை வாங்கியுள்ளனர். அந்த மூன்று பெண்மணிகளும் கடையை விட்டு செல்லும்போது அவர்களின் நடையில் வித்தியாசம் காணப்பட்டதை சூப்பர் மார்க்கெட்டின் உரிமையாளர் கவனித்து சந்தேகம் அடைந்துள்ளார்.
உடனே அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது, அப்பெண்கள் பொருட்கள் தேர்ந்தெடுத்து, ஆளில்லாத நேரத்தில் தங்களின் உள்ளாடைக்குள் இரண்டு கால்களின் மத்தியில் ஓரு பையை மறைத்து வைத்து அதில் பொருட்களை போட்டு திருடி சென்றது தெரியவந்தது. சூப்பர் மார்க்கெட்டின் ஊழியர்கள் வெளியே வந்து தேடி பார்த்த போது அந்த மூன்று பெண்களும் காணவில்லை. அந்தப் பெண்கள் உள்ளாடைக்குள் பொருட்களை மறைத்து எடுத்து சென்ற வீடியோ காஞ்சிபுரம் நகரில் வைரலாக பரவி வருகிறது.
கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசியவர், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தின்…
பயமூட்டும் வில்லன் தமிழ் சினிமா வில்லன் நடிகர்களில் மிகவும் டெரர் ஆன வில்லனாக வலம் வந்தவர் ஆனந்த்ராஜ். குறிப்பாக பெண்களிடம்…
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகிலேயே இந்த தீவிரவாதத்தை தடுக்க வேண்டும், எந்த நாட்டிலும் தீவிரவாதம் இருக்கக்…
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைந்து ஐந்தாம்…
வாட்டர்மிலன் ஸ்டார் இன்ஸ்டாகிராம் ரீல்ஸின் மூலம் தமிழ் இணையவாசிகளின் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டாக்டர் திவாகர். “கஜினி” திரைப்படத்தில் சூர்யா…
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். அதை தவிர, திமுகவில் அண்மையில் இணைந்து பணியாற்றி வருகிறார்.…
This website uses cookies.