கிருஷ்ணகிரி : ஓசூர் அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
ஓசூர் சானசந்திரம் கடவுள் நகரைச் சேர்ந்த முத்து (32) என்பவர் கடந்த 2014ம் ஆண்டு, மே 12ம் தேதி 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் 9 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் முத்து மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டது. அதாவது, குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 10 ஆண்டுகளும், கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. அதோடு, 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சுதா தீர்ப்பு அளித்தார்.
இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.