Categories: தமிழகம்

பெண்ணிடம் 30 பவுன் நகை, ரூ. 4.5 லட்சம் மோசடி : போலி வழக்கறிஞர் கைது

திருச்சி : குடும்ப பிரச்னையை தீர்த்து வைப்பதாகக்கூறி பெண்ணிடம் 30 பவுன் நகை, ரூ.4.5 லட்சம் பணம் மோசடி செய்த போலி வக்கீல் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகேயுள்ள பிச்சாண்டார்கோவில் ஊராட்சி நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள ஆனந்த்நகரை சேர்ந்தவர் 65 வயதான தனலட்சுமி. இவரது மகன் 40 வயதான கனகராஜிக்கும் பரமக்குடியை சேர்ந்த 37 வயதான கவிமலர் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கவிமலர் கணவனை பிரிந்து பரமக்குடியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கவிமலர் தனது கணவர் வீட்டிற்கு வந்து திருமணத்தின்போது வரதட்சணையாக கொடுக்கப்பட்ட நகைகளை தரும்படி மாமியார் தனலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதுகுறித்து கவிமலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனால் தனலட்சுமி மன வருத்தத்தில் இருந்துள்ளார்.இதையடுத்து தனலட்சுமி வக்கீலை நாடிய போது பக்கத்து பிளாட்டில் குடியிருக்கும் பீர்பால் மகன் 37 வயதான முகமது இஸ்மாயில் என்பவர் நான் குளித்தலை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன்.

உங்கள் மருமகள் தொடுத்த வழக்கை எளிதில் முடிக்க அவரிடம் கொடுக்க வேண்டிய நகை பணத்தை என்னிடம் கொடுங்கள். இதனை சுமூகமாக முடித்து வைத்து வழக்கை திரும்பப் பெற ஏற்பாடு செய்கிறேன் என ஆறுதல் கூறியுள்ளார். இதனை நம்பிய தனலட்சுமி முகம்மது இஸ்மாயிலிடம் 30 பவுன் நகை 4 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். இருப்பினும் இஸ்மாயில் குடும்ப பிரச்சினையை தீர்த்து வைக்கவில்லை. இதுகுறித்து தனலட்சுமி முகம்மது இஸ்மாலிடம் கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த தனலட்சுமி இதுகுறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் தனலட்சுமி புகார் அளித்தார்.புகாரின் பேரில் கொள்ளிடம் காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் போலீசார் முகம்மதுஇஸ்மாயில் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.பின்னர் கைது செய்து ஸ்ரீரங்கம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி துறையூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.

KavinKumar

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

2 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

2 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

2 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

3 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

4 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

5 hours ago

This website uses cookies.