பழனி முருகன் கோவில் சார்பில் தயாரிக்கப்பட்ட காலாவதி தேதி முடிந்து, கெட்டுப்போன 66 கேன்களில் டன் கணக்கிலான பஞ்சாமிர்தங்களை ஏற்றி சென்ற வாகனத்தை பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் சார்பில் தயாரித்து பிரசாதமாக விற்பனை செய்யப்படும் லட்டு, முறுக்கு, அதிரசம் பஞ்சாமிர்தங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த தைப்பூசத்தை முன்னிட்டு கூடுதலாக 1 லட்சம் பஞ்சாமிர்தங்கள் தயாரிக்கப்பட்டதாகவும், அதில் இருந்த பஞ்சாமிர்தங்கள் காலாவதி தேதி முடிந்து விற்பனை செய்யப்படுவதாகவும் பக்தர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். அதனை தனியார் தொலைக்காட்சிகளில் ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், தாங்கள் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் காலாவதி தேதி குறிப்பிட்ட 15 நாட்களில் இருந்து கூடுதலாக 15 நாட்கள் வைத்து பயன்படுத்தலாம் என விளக்கம் அளித்து இருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை அடிவாரத்தில் உள்ள பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையத்திலிருந்து சுமார் ஒரு கேன்களுக்கு 50 கிலோ விதம் 66 கேன்கள் மூலமாக லாரியில் காலாவதியான பஞ்சாமிர்தங்களை ஒட்டன்சத்திரம் அருகே கள்ளி மந்தையம் கோசலா வளாகத்தில் வைத்து அழிப்பதற்காக கொண்டு செல்லும்போது, பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் லாரியை தடுத்து நிறுத்தி சிறை பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இந்து அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி காலாவதியான பஞ்சாமிர்தம் லாரியை அடிவாரம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
This website uses cookies.