வேலூர் ; அணைக்கட்டு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுத்து நிறுத்திய போலீசார், 3700 லிட்டர் சாராய ஊரல்களை அழித்தனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சுற்றியுள்ள மலைப்பகுதியில் சுமார் 82 மலை கிராமங்கள் உள்ளனர். இன்று ஒரே நாளில் திடீரென 100 போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அணைக்கட்டு தாலுக்காவில் உள்ள அல்லேரி, வாழைப்பந்தல், நெல்லிமரத்துக் கொள்ளை உள்ளிட்ட மலை பகுதிகளில் எந்த அளவிற்கு விவசாயம் நடக்கிறதோ, அதை விட பல மடங்கு கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று கொண்டுள்ளனர்.
இதனை கண்டுபிடிக்க அணைக்கட்டு காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதிக்கு சென்று அங்கு இருந்த சாராய ஊரல்களை அழித்தனர். அப்போது, அல்லேரி, ஜார்தான் கொள்ளை காட்டுக்கு நடுவே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக பிளாஸ்டிக் பேரல்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் 3700 லிட்டர் சாராய ஊரலை போலீசார் கைப்பற்றி அதனை கீழே கொட்டி அழித்தனர்.
மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சிவதற்காக பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பேரல்கள், மண் பானைகள், அடுப்பு போன்றவற்றை பயன்படுத்தாதவாறு நொறுக்கி தீமூட்டி அழித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
மேலும், காட்டுக்கு நடுவே யார் கள்ளச்சாராயம் காய்ச்ச ஊரல் பதுக்கி வைத்தது என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.