Categories: தமிழகம்

வேலூரில் ஒரு நிர்பயா கொடூரம்…ஆட்டோவில் பெண் மருத்துவர் கூட்டு பலாத்காரம்: மைனர் சிறுவர்கள் உள்பட 5 பேர் வெறிச்செயல்..!!

வேலூர்: வேலூரில் சினிமா பார்த்துவிட்டு நள்ளிரவு வீடு திரும்பி கொண்டிருந்த பெண் மருத்துவரை 5 பேர் கும்பல் கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று முன்தினம் இரவு 2 இளைஞர்கள் போதையில் ஒருவருக்கொருவர் தடியால் தாக்கி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த சத்துவாச்சாரி போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து போதையில் இருந்த 2 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வழிப்பறி சம்பவம் மட்டுமின்றி பெண் மருத்துவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது,

கடந்த 3 நாட்களுக்கு முன்பு காட்பாடியில் ஆண் நண்பருடன் இரவு காட்சி சினிமா பார்த்துவிட்டு வேலூர் தனியார் மருத்துவமனை பெண் மருத்துவர் இருப்பிடம் திரும்புவதற்காக ஆட்டோவுக்கா காத்திருந்துள்ளார். அப்போது, அங்கு ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அதில் ஏற்கனவே 4 பேர் இருந்ததால், இந்த பெண் தயக்கம் காட்டியுள்ளார்.

ஆனால், அதற்கு அந்த ஓட்டுநரோ இது ஷேர் ஆட்டோ தான் ஏறுங்க என கூறியுள்ளார். இதனையடுத்த, வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே சத்துவாச்சாரியை நோக்கி திரும்பியுள்ளது. இது குறித்த, அந்த பெண் மருத்துவர் ஆட்டோ டிரைவரிடம் கேட்டபோது, வழியில் பேரிகார்டு வைத்து அடைத்துள்ளனர். சத்துவாச்சாரி சென்று ஆற்காடு சாலை வழியாக இருப்பிடம் செல்லலாம் என்று கூறி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை வழியாக வந்துள்ளனர்.

அப்போது, ஆட்டோ கலெக்டர் அலுவலகம் முன்பாக பாலாற்றங்கரை செல்லும் சாலை வழியாக ஆட்டோவை திருப்பியபோது, அப்பெண் மீண்டும் ஆட்டோ டிரைவரிடம் தவறான வழியில் செல்வது பற்றி கேட்டார். உடனடியாக ஆட்டோவில் வந்தவர்கள் அப்பெண்ணுடன் வந்த ஆண் நண்பரை அடித்து சாலையில் தள்ளிவிட்டு பாலாற்றங்கரையோரம் அப்பெண்ணை மிரட்டி அழைத்து சென்றுள்ளனர்.

அங்குள்ள பார் அருகே வைத்து 3 பேர் அந்த பெண் மருத்துவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரிடம் இருந்த ஏடிஎம் கார்டு, செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு அப்பெண்ணை விரட்டியுள்ளனர். தொடர்ந்து ஏடிஎம் கார்டு மூலம் பெண் மருத்துவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரத்தையும் எடுத்து சென்றுள்ளனர்.

அந்த பணத்தை பங்கிடும்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின்போதுதான் போலீசில் சிக்கினர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். மேலும் போதை ஆசாமிகள் கொடுத்த தகவலின்பேரில், மேலும் ஒருவரையும் போலீசார் பிடித்தனர். பிடிப்பட்ட 3 பேரிடமும் சத்துவாச்சாரி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை பெண் மருத்துவரை, அவரது ஏடிஎம் கார்டை வைத்து அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். அந்த பெண் மருத்துவரையும், அவரது நண்பரையும் நேரில் அழைத்து புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் தற்போது பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது பெண்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் தடுக்கப்படும்என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.