தமிழகம்

மனைவி சொல்லியும் கேட்காத கணவன்.. வீட்டுக்குள் கிடந்த 4 சடலம் : திருச்சியில் சோகம்!

திருச்சி மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துணிக்கடை நடத்தி வந்தார்.

இவருக்கு விக்டோரியா(35) என்ற மனைவியும் ஆராதனா (வயது 9) ஆலியா (வயது 3) என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். விக்டோரியா ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார்.

இதையும் படியுங்க: உன் மகள் முகத்தில் ஆசிட் வீசிருவோம்.. கொலை மிரட்டலால் கதிகலங்கிப் போன குடும்பம் : பரபரப்பு புகார்!

இந்த நிலையில் தான் நடத்தி வந்த துணிக்கடையில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால் அலெக்ஸ் அந்த கடையை மூடி விட்டார் . அந்த வியாபாரத்திற்காக பல இடங்களில் பல லட்ச ரூபாய் கடன் வாங்கியதால் அவருக்கு அதிக அளவு கடன் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் மேலும் கடன் வாங்கி திருச்சியில் சொந்த வீடு ஒன்றையும் அலெக்ஸ் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அலேசுக்கும் அவருடைய மனைவி விக்டோரியாக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் தான் கடன் அதிகமாக இருந்த சூழலில் நேற்று இரவு தம்பதிகள் இருவரும் தங்கள் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாங்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நான்கு பேரும் இறந்து கிடந்ததை அறிந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை எடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நான்கு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்திற்கு கடன் பிரச்சினை தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.