கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பாரதப்புழாவில் கபீர் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் குளிக்க சென்றுள்ளார்.
குழந்தைகள் ஆற்று நீரில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராத விதமாக நீர் ஓட்டத்தில் சிக்கி உள்ளனர்.
இதையும் படியுங்க: புரிஞ்சுக்கோங்க சார்.. அது நீங்க இல்ல.. வைரலாகும் பார்த்திபன் பதிவு.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
இதைப் பார்த்த கபீர் மற்றும் அவரது மனைவி இருவரும் ஆற்றில் குதித்து குழந்தைகளை காப்பாற்ற முயற்சி செய்தனர் ஆனால் நான்கு பேரும் கரை திரும்ப முடியாமல் ஆழமான பகுதிக்கு சென்று சிக்கிக் கொண்டனர்.
இவர்களுடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது அவர்களும் வந்து பல மணி நேர தேடுதலுக்கு பிறகு இறந்த நிலையில் நான்கு பேரையும் மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.