கோவை : கோயம்புத்தூர் மாநகராட்சி 32 வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மகேஸ்வரன் என்பவர் தனது வார்டில் தேங்கியுள்ள சாக்கடைகளை சுத்தம் செய்து வாக்கு சேகரித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 32 வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடும் மகேஸ்வரன் என்ற வேட்பாளர் இன்று தனது வார்டில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் தங்களது பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக சாக்கடை சுத்தம் செய்யாமல் அப்படியே இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மகேஸ்வரன் தனது ஆடைகளை கழட்டி விட்டு தனது மனைவியுடன் சேர்ந்து சாக்கடையில் இறங்கி அடைப்புகளை சரி செய்தார். அதன்பின்னர் அந்த தெருவில் இருந்த அனைத்து வீடுகளுக்கும் சென்று நோட்டீஸ்களை வழங்கி தனக்கு வாக்களிக்குமாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தான் வெற்றிபெற்றால் அந்த வார்டில் உள்ள 56 தெருக்களிலும் அனைத்து சாக்கடைகளும் முழுமையாக உடனடியாக சுத்தம் செய்யப்படும் என தெரிவித்தார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.