ராசிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் 4 பேர் தலைக்கவசம் இன்றி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இருசக்கர வாகனத்தில் 2 மட்டுமே பயணிக்க வேண்டும் என போக்குவரத்து விதிமுறைகள் இருப்பினும், அதனை காற்றில் பறக்கவிட்டு குடும்பத்தினர் மற்றும் இளைஞர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருவது வாடிக்கையான ஒன்றாகும்.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் 4 நபர்கள் தலைக்கவசம் இன்றி ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர்.
ஆண்டகலூர்கேட் பகுதியில் இருந்து ராசிபுரத்தை நோக்கி இரு சக்கர வாகனத்தில் 4 பேர் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டதில் குழந்தையைப் போல் இளைஞர் ஒருவர் பெட்ரோல் டேங்க் மீது ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு செல்லும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
போக்குவரத்து காவல்துறையினர் முறையாக பணிகளில் ஈடுபட்டு இதுபோல பயணம் செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.