வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியைச் சேர்ந்த வேணு என்பவர் தனது நான்கு வயது ஆண் குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வந்தார்.
தனது இருசக்கர வாகனத்தில் வீட்டு நுழைவு வாயிலில் அழைத்து சென்றார். அப்போது வீட்டு முன் நின்றிருந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட காரில் வந்த ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் மிளகாய் பொடி தூவி குழந்தையை கடத்தினான்,
விடாமல் துரத்திய தந்தை முயன்றும் முடியவில்லை. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலானது.
பட்டப் பகலில் நான்கு வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை குடியாத்தம் நகர போலீசார் ஆராய்ந்து வந்தனர். கர்நாடகா பதிவு எண் கொண்ட காரில் வந்த மர்ம நபர்கள் குழந்தையை கடத்திச் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
பின்னர் போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக பதிவெண் கொண்ட காரை சோதனையிட முயன்றனர். குழந்தையை கடத்தி சென்ற கார் அருகில் தான் இருக்கும் என உணர்ந்த போலீசார், உடனே சோதனைச்சாவடிக்கு தகவல் அளித்தனர்.
போலுசார் நெருங்கியதை அறிந்த கடத்தல் கும்பல் குழந்தையை மாதனூர் பகுதியில் இறக்கி விட்டு சென்றது. இதையடுத்து குழந்தையை மீட்ட காவல்துறை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.