கோவை : 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றவாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை,ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2019 ஆம் ஆண்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ரங்கன் என்பவரது மகன் செல்வராஜ் (வயது 45) என்பவர் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதுதொடர்பான வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கினை விசாரித்து வந்த மகிளா நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும்,ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு கூடுதலாக கடுங்காவல்தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்ற அதிரடி தீர்ப்பினை வழங்கினார்.
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
This website uses cookies.