சின்னத் திரையில் பிரபலமாக ஆகி பின்னர் சினிமாவில் சாதித்து வருபவர்கள் தற்போது அதிகரித்து கொண்டே வருகின்றனர். அதிலும் விஜய் டி.வியில் பிரபலமாக இருக்கும் பலரும் பெரிய அளவில், வருகின்றனர். அந்த வரிசையில், சந்தானம், சிவகார்த்திகேயன், பிரியா பவானி சங்கர், குக் வித் கோமாளி புகழ் ஆகியோரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவர்களை தொடர்ந்து வந்தவர் தான் அஸ்வின். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக மாறிய இவர், 40 கதையை கேட்டு தூங்கி விட்டேன் என்று ஓவர் பேச்சால் பல சர்ச்சைகளை எதிர் கொண்டார்.
அவரை தொடர்ந்து அடுத்த சர்ச்சையில் தற்போது அதே குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சிவாங்கி சிக்கியுள்ளார். இவர் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார்.
அதில் இவருடைய சின்ன சின்ன சேட்டைகளும், வெகுளித்தனமாக பேச்சும் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தது. இன்றளவிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதாக அவரே கூறிக்கொள்வார்.
இதனால் அவருக்கு சினிமா வாய்ப்புகளும் அடுத்தடுத்து கிடைத்தது. தற்போது இவர் டான், காசேதான் கடவுளடா, நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படி ஏகப்பட்ட பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்து வருவதால் அவருடைய நடவடிக்கைகளும் மாறி விட்டதாக தெரிகிறது.
முன்பெல்லாம் ஏதாவது கடை திறப்பு விழாவிற்கு இவரை அழைத்தால் உடனே ஒப்புக் கொள்வாராம். ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. இப்போது இவர் கடை திறப்பு விழாவிற்கு வர வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் வேண்டும் என்று கேட்கிறாராம்.
அதுமட்டுமல்லாமல் இவரிடம் தங்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்று யாராவது கேட்டால் ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுகிறாராம். முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பு நிறுவனம், ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் இப்படிப்பட்டவர்களின் படங்களில் தான் நடிப்பேன் என்று கறாராக கூறுகிறாராம்.
இதனால் அதிர்ந்து போன பலரும் ஏன் என்று கேட்டால் நான் இப்போது பெரிய செலிபிரிட்டி என்று கூறுகிறாராம். நடித்த முதல் படமே வெளியாகவில்லை அதுக்குள்ள இவ்வளவு அலப்பறையா என்று இவரைப் பற்றி தற்போது பலரும் பேசி வருகின்றனர். மேலும் இப்படித்தான் அஸ்வின் ஓவராக ஆட்டம் போட்டு தற்போது அடங்கி போய் இருக்கிறார். அவரின் நிலை இவருக்கு வராமல் இருந்தால் சரிதான் என்றும் கிசுகிசுக்கின்றனாராம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.