தூத்துக்குடி அருகே கத்தியை காட்டி மிரட்டி 40 வயது பெண்ணை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த ரவுடி உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு கடந்த 14ம் தேதி இரவு நடந்து சென்று கொண்டிருந்து உள்ளார். அப்போது, தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்த கட்டை முருகன் என்பவரும், அழகேசபுரத்தை சேர்ந்த கோகுல்ராம் என்பவரும், இருசக்கர வாகனத்தில் வந்து பெண்ணை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி தங்களது இருசக்கர வாகனத்தில் கடத்திக் கொண்டு சென்றுள்ளனர்.
தருவைக்குளம் கல்மேட்டில் உள்ள ஒரு வீட்டிற்கு கொண்டு சென்று, அங்கு கட்டை முருகன் அவரை கற்பழித்துள்ளார். பின்னர் காலையில் பெண்ணின் வீட்டருகில் உள்ள சந்திப்பில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து, கோகுல்ராம் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு உடலுறவுக்கு அழைத்துள்ளார்.
அவர் வர மறுத்ததால் அவரை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்த அந்த பெண் 15 ம் தேதி தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இது தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், இந்த வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்தஅனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வனிதா மற்றும் தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, தாளமுத்துநகர் பகுதியில் ஒருவரை அரிவாளை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறித்துக் கொண்டு, அங்கிருந்து வேகமாக தனது பைக்கில் சென்ற கட்டை முருகன் தவறி கீழே விழுந்துள்ளார். அதில் அவருக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டு கை முறிவு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, முருகன் என்ற கட்டை முருகன் மற்றும் கோகுல்ராம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் பிரபல ரவுடி கட்டை முருகன் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற போது, அவரது வலது கையில் முறிவு ஏற்பட்டதற்கு போலீசார் மாவுகட்டு போட்டு சிகிச்சை அளித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.