திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சட்ட விரோதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் அவர்கள் அறிவுறுத்தலின்படி, தனிப்படை காவல்துறையினர் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், முள்ளிப்பாடி செட்டியபட்டி பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, சந்தேகத்தின்படி வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 400 கிலோ கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, கஞ்சாவை கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த பிரவீன் (29), சதீஷ்குமார்(26) மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சரவணகுமார் (27) ஆகிய மூன்று நபர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் திண்டுக்கல் வழியாக மதுரைக்கு கஞ்சா கடத்த இருந்தது தெரியவந்தது. மேற்கண்ட 3 நபர்கள் மீது திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள். மேலும், அவர்களிடமிருந்து 400 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களை பறிமுதல் செய்தனர்.
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
This website uses cookies.