கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் உயிரிழப்புக்கு காரணமாகியது. இந்த துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று, த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மதுரைக்கிளை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை உடனடியாக பாதுகாக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க விஜயோ அல்லது தாமோ செல்வதை தடுக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கரூர் சம்பவத்திற்குப் பிரதான காரணம் காவல்துறையின் அலட்சியமே எனவும், அதற்கு உள்ளூர் அரசியல்வாதிகளும் சில குண்டர்களும் நேரடியாக தொடர்புடையவர்கள் எனவும் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வி.சி.க. தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியைப் பற்றிய எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு பதிலளித்தார். அப்போது அவர், “திமுக…
This website uses cookies.