Categories: தமிழகம்

45 முறை போதைப் பொருள் கடத்தல்.. வாயே திறக்காத முதலமைச்சர் ஸ்டாலின் தூங்கிக் கொண்டிருக்கிறார் : இபிஎஸ் கடும் விமர்சனம்!

45 முறை போதைப் பொருள் கடத்தல்.. வாயே திறக்காத முதலமைச்சர் ஸ்டாலின் தூங்கிக் கொண்டிருக்கிறார் : இபிஎஸ் கடும் விமர்சனம்!

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது என கூறி அதிமுக சார்பில் இன்று தமிழக முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு போராட்டத்தை முன்னெடுத்தார்.

இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.

ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறி உள்ளது. தமிழகம் தற்போது போதைப்பொருள் விற்பனை மையமாக செயல்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக், பல ஆண்டுகளாக போதை பொருள் கடத்தி வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஜாபர் சாதிக், திமுக அயலக அணி பொறுப்பாளராக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக இதுவரை 45 முறை போதைப்பொருளை இவர் கடத்தி உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது.

அதன் மூலம் கிடைத்த பணத்தில் திமுக நிர்வாகிகளுக்கு நிதி அளித்ததாகவும், ஹோட்டல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை முறையாக விசாரித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று தமிழக முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகிறோம்.

ஜாபர் சாதிக் முதலமைச்சரிடம் நிதி வழங்குவது போலவும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதி வழங்குவது போலவும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. காவல்துறையினரிடம் ஜாபர் சாதிக் நட்போடு இருப்பது போல புகைப்படம் வெளியாகி வருகிறது இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

ஜாபர் சாதிக் மீது 2019ஆம் ஆண்டே மலேசியாவுக்கு போதை பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட பின்னர் கடந்த 10 நாட்களில் மட்டும் 150 கோடி மதிப்பிளான போதை பொருட்கள், ராமேஸ்வரம் மண்டபம் கடற்கரையில் கடத்தப்பட இருந்த போதைப்பொருட்கள், நேற்று கூட புதுக்கோட்டை கடற்கரையில் கடத்தப்பட இருந்த போதை பொருட்களை மத்திய போதைப்பொருள் கடத்தல் பிரிவு போலீசார் தான் கைது செய்து வருகின்றனர்.

தமிழக போலீசார் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் கும்பகர்ணன் போல தூங்கி வருகின்றனர் எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நடைபெற்ற மனித சங்கிலி போரட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

11 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

11 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

12 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

13 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

13 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

13 hours ago

This website uses cookies.