அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனியார் சூப்பர் மார்கெட்டில் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நூதன முறையில் திருடும் பெண்களின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் பிரபல அலிஸ் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இங்கு வந்த சிலர் சந்தேகத்திற்கு இடமாக கடையின் உள்ளே சுற்றி திரிந்துள்ளனர். இதனால், சந்தேகம் அடைந்த ஊழியர்கள் சிசிடிவியை கவனித்தபோது அவர்கள் நூதனமாக திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
அவர்களை பிடித்து சோதனை செய்ததில் பெண்கள் உள்ளாடையில் வைத்து தனியா, பாதம், முந்திரி, ஹார்லிக்ஸ் மற்றும் உயர்ரக செல்போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே கடை மேலாளர் ஊழியர்களின் உதவியுடன் அவர்களை பிடித்தனர். பின் மேலாளர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்டவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அம்பத்தூர் சிவானந்த நகரை சேர்ந்த குட்டியம்மாள் வ/43,செல்வி வ/38 சந்தோஷ,வ/22, சஞ்சய் வ/20 ஆகியோர் கைது செய்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர், அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பிரியா வ/18 என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.