தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மாதம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே திருப்பள்ளியெழுச்சி, மங்கள இசை, திருச்சுற்றுக் கலசநீராட்டு, ஆனைந்தாட்டல், காப்பணிவித்தல், நான்காம் காலவேள்வி, பேரொளி வழிபாட்டுடன் பூர்ணாஹதி நடந்தது.
இதனையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தத்தை யாகசாலையில் இருந்து சிவாச்சாரியர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் உச்சியில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாரதனை காட்டினார்.பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
இதனையடுத்து ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.
இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி வெளிச்சந்தையைச் சேர்ந்த மூதாட்டி விமலாவின் கழுத்தில் இருந்த 5-பவுன் தாலி செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதனையறிந்த மூதாட்டி செய்வதறியாமல் கண்ணீர் விட்ட சம்பவம், கும்பாபிஷேக விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.