வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கோவை காரமடை பகுதியில் வசித்து வருபவர் 5 வயது சிறுமி. இவர் நேற்று அப்பகுதியில் விளையாடி கொண்டு இருந்து உள்ளார். அப்போது, காரமடையைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பயந்து போன சிறுமி இதுகுறித்து தனது சகோதரியிடம் தெரிவித்து உள்ளார். தொடர்ந்து சிறுமியை உறவினர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று உள்ளனர்.
தொடர்ந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து காரமடை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் காரமடையை சேர்ந்த கூலித் தொழிலாளி பத்திரசாமி (45) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.