வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கோவை காரமடை பகுதியில் வசித்து வருபவர் 5 வயது சிறுமி. இவர் நேற்று அப்பகுதியில் விளையாடி கொண்டு இருந்து உள்ளார். அப்போது, காரமடையைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பயந்து போன சிறுமி இதுகுறித்து தனது சகோதரியிடம் தெரிவித்து உள்ளார். தொடர்ந்து சிறுமியை உறவினர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று உள்ளனர்.
தொடர்ந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து காரமடை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் காரமடையை சேர்ந்த கூலித் தொழிலாளி பத்திரசாமி (45) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள்…
ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…
ஹிட் அடித்த ஹிட் 3 தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச்…
This website uses cookies.