Categories: தமிழகம்

பட்டா கத்தியை காட்டி மிரட்டல்… பாருக்குள் களேபரம் செய்து பணம் பறிக்க முயன்ற வழக்கில் 5 பேர் கைது..! சிக்கியது எப்படி..?

நீலகிரி: டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் 5 பேரை சிறுமுகை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் விஜய் ஆனந்த். இவர் சிறுமுகையிலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் உள்ள 1811 டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார்.

கடந்த 31 ஆம் தேதி விஜய் ஆனந்த் டாஸ்மாக்கில் கலெக்சனான ரூபாய் 10 லட்சம் பணத்தை வங்கியில் செலுத்த மேட்டுப்பாளையத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமுகை ரோடு ஆலாங்கொம்பு அருகே இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் விஜய் ஆனந்தை மரித்து பட்டா கத்தியை காட்டி மிரட்டி பணத்தைப் பறிக்க முயற்சித்தனர்.

இதனால் பயந்து போன விஜய் ஆனந்த் சத்தமிட சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆட்கள் வருவதை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதுகுறித்து விஜய் ஆனந்த் சிறுமுகை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தை அங்கிருந்து சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் செல்வநாயகம் அன்னூர் காவல் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் சிறுமுகை காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் விஜய் ஆனந்த இடம் பணம் பறிக்க முயன்றவர்கள் யார் என்பதைக் குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே பார் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் போலீசார் திருபுவனம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஆகாஷ் கண்ணன் 22, திருபுவனம் கீழடி காமராஜர் புரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் முத்துப்பாண்டி 21, திருபுவனம் பகுதியை சேர்ந்த அந்தோணி மகன் ரவிக்குமார் 22, பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் லோகநாதன் 27 சதீஷ் (20) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மேற்கண்ட டாஸ்மாக் கடையில் கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு வேலை பார்த்த ஒரு நபர் கொடுத்த தகவலின் பெயரில் பணம் பறிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. மேலும் அந்த நபர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Poorni

Recent Posts

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

11 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

12 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

12 hours ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

13 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

14 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

15 hours ago

This website uses cookies.