கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு.
கோவை பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள ஈச்சனாரி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. கோவை பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஈச்சனாரி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
அதிகாலை 4 மணியிலிருந்து சிறப்பு வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவையின் சிறப்பு வாய்ந்த ஈச்சனாரி விநாயகர் கோவிலில் வழிபட பொள்ளாச்சி ,மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, மற்றும் அண்டை மாநிலமான கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபட்டு வருகின்றனர்.கொரோனா காலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் கூட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு பக்தர்கள் கட்டுப்பாடுகள் இன்றி மன நிறைவுடன் வழிபட்டு வருகின்றனர்.
மேலும் இன்று ஈச்சனாரி விநாயகருக்கு அருகம்புல் மாலை, எருக்கம்மாலை கொழுக்கட்டைகள் வைத்து வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.