கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு.
கோவை பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள ஈச்சனாரி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. கோவை பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஈச்சனாரி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
அதிகாலை 4 மணியிலிருந்து சிறப்பு வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவையின் சிறப்பு வாய்ந்த ஈச்சனாரி விநாயகர் கோவிலில் வழிபட பொள்ளாச்சி ,மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, மற்றும் அண்டை மாநிலமான கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபட்டு வருகின்றனர்.கொரோனா காலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் கூட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு பக்தர்கள் கட்டுப்பாடுகள் இன்றி மன நிறைவுடன் வழிபட்டு வருகின்றனர்.
மேலும் இன்று ஈச்சனாரி விநாயகருக்கு அருகம்புல் மாலை, எருக்கம்மாலை கொழுக்கட்டைகள் வைத்து வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.