கோவையில் தங்க நகைகளுடன் தலைமறைவான நகை பட்டறை தொழிலாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை கடைவீதி அடுத்த சாமி அய்யர் புது வீதி பகுதியைச் சேர்ந்த வெள்ளிங்கிரி என்பவரின் மகன் கார்த்திகேயன் (30). இவர் அதே பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார்.
இவரது நகை பட்டறையில் சலீவன் வீதி பகுதியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு லிங்கேஸ்வரன் நகை பட்டறையை பூட்டிவிட்டு அதன் சாவியை உரிமையாளர் கார்த்திகேயன் இடம் கொடுக்காமல் வைத்திருந்தார்.
நேற்று அதிகாலையில் லிங்கேஸ்வரன் நகை பட்டறையை திறந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த 31″லட்சத்து 80″ ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 530 கிராம் தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றார். நேற்று காலை கார்த்திகேயன் தனது நகை பட்டறைக்கு சென்ற போது, இந்த விபரம் தெரிய வந்தது. இதனால், அதிர்ந்து போன அவர், கடைவீதி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் சலிவன் வீதி பகுதியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தங்க நகைகளுடன் தலைமறைவான லிங்கேஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.