கோவையில் தங்க நகைகளுடன் தலைமறைவான நகை பட்டறை தொழிலாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை கடைவீதி அடுத்த சாமி அய்யர் புது வீதி பகுதியைச் சேர்ந்த வெள்ளிங்கிரி என்பவரின் மகன் கார்த்திகேயன் (30). இவர் அதே பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார்.
இவரது நகை பட்டறையில் சலீவன் வீதி பகுதியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு லிங்கேஸ்வரன் நகை பட்டறையை பூட்டிவிட்டு அதன் சாவியை உரிமையாளர் கார்த்திகேயன் இடம் கொடுக்காமல் வைத்திருந்தார்.
நேற்று அதிகாலையில் லிங்கேஸ்வரன் நகை பட்டறையை திறந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த 31″லட்சத்து 80″ ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 530 கிராம் தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றார். நேற்று காலை கார்த்திகேயன் தனது நகை பட்டறைக்கு சென்ற போது, இந்த விபரம் தெரிய வந்தது. இதனால், அதிர்ந்து போன அவர், கடைவீதி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் சலிவன் வீதி பகுதியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தங்க நகைகளுடன் தலைமறைவான லிங்கேஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.